~பின்னூட்டம் போட்டுவிட்டு செல்லலாமே~

WELCOME

Wednesday, January 4, 2012

மனதைத்தொட்ட கவிதை

"காக்கைச் சிறகினிலே "என்ற சிற்றிதழ் ஒன்றில் "ஷீர்கோ பெகாசஸ் "எழுதிய கவிதை இது.வாசித்தபோது ஏதேதோ நினைவுகள் ,



'வான்வெளியில் கொல்லப்பட்டன

அந்தப் பறவைகள்

கொலைகாரர்களுக்கு எதிராக

நட்சத்திரங்களும் மேகங்களும்

காற்றும் கதிரவனும்

சாட்சி கூறவில்லை என்றாலும்

அடிவானம் அதுபற்றிக்

கேட்க விரும்பவில்லை என்றாலும்

மலைகளும் ஆறுகளும்

அவற்றை மறந்துபோய்விட்டாலும்

ஏதேனும் ஒரு மரம்

அந்தக் கொடுஞ்செயலைப்

பார்த்துத்தானிருக்கும்

தன் வேர்களில்

அக்கொடியோனின் பெயரை

எழுதிவைக்கத்தான் செய்யும்!'

No comments:

Post a Comment