~பின்னூட்டம் போட்டுவிட்டு செல்லலாமே~

WELCOME

Saturday, February 25, 2012

கத்தியும் புத்தியும் -joke

கத்தியும் புத்தியும் -ஜோக்


"என்ன  கத்திய தீட்டிக்கொண்டு இருக்கிறாய் ?"

"கத்தியத் தீட்டாதே புத்தியைத் தீட்டு ,எண்டு பெரியவங்க சொன்னத கவனத்தில  எடுக்காம  போய்ட்டன்"

"என்னப்பா எதோ சொல்லுறாய் "

"ஓமப்பா..காலமை புத்திய தீட்டி யோசிச்சுப் பேசாததால்  இப்ப கத்தியத் தீட்ட வேண்டி வந்திட்டு ."

"ஐயோ !! அவசரப்பட்டு முடிவு எடுக்காத .."

"வேற வழி இல்ல ,கத்திதான் இப்ப எனக்கு தேவை"

"எதுக்கும் கொஞ்சம் ஆறுதலா  யோசிச்சால் நல்லம் ,நான் சொல்லுறத கொஞ்சம் கேள் "

"இனி யோசிக்க ஒண்டும் இல்ல,ஒரு தரத்துக்கு நாலு தரம் யோசிச்சித்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறன் "

"கத்தி எடுக்கிற அளவு விபரீதம் அப்பிடி என்னதான் நடந்தது ,அத முதல் சொல்லு "

"அதுவா? காலம மைசூர்பாகு சாப்பிட ஆசையா இருக்கு எண்டு ,எண்ட wife ட்ட பின் விளைவ கொஞ்சமும் யோசிக்காம சொல்லிட்டன் ,அத கேட்டு அவ உடனே மைசூர்பாகு செய்திட்டா..ஆனா பல்லால கடிக்க முடியல்ல,அவ செய்தத சாப்டாம விட்டாலும் அவக்கு கோபம் வந்திடும்,அதான் கத்தியால வெட்டி சாபிட்டுவம் எண்டு ...."

"!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!"

No comments:

Post a Comment