~பின்னூட்டம் போட்டுவிட்டு செல்லலாமே~

WELCOME

Monday, December 26, 2011

யோக நிலை

                                             யோக நிலை
மனிதன்  சுகபோகங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறான்.சுக போக வாழ்க்கை போலியானது.உண்மையான ஆத்ம சந்தோசம் இதனால் கிட்டுவதில்லை.புகழ்ச்சியும்,நிந்தனையும் மனதை அலைக்களிக்காத மனத்திடமான திருப்தியான வாழ்க்கைதான் ஒருவனுக்கு உண்மையான ,நிம்மதியான வாழ்வாகும்.

சில யோகசாதனைகள் மூலம் மனிதன் மிக மேம்பட்ட உன்னத மன நிலையைப்  பெறலாம் என பல மகான்களும்,யோகிகளும் நிரூபித்துள்ளனர்.இந்த மகொனதநிலையை சாமானிய மனிதனால் எட்டிப்பிடிக்க இயலுமா?,சிலர் சராசரி மனிதனால் செய்யமுடியாத செயல்களைச் செய்வது யோகம் என எண்ணுகின்றனர்.இவை தவறான கருத்துக்கள்.

யோகத்தில் சிறந்த யோகம் எது?பிறர் செய்யும் அவமரியாதையும்,துன்பத்தையும் பொறுப்பதே ஆகும்.

இயேசு நாதர் தனது பிரச்சங்கமொன்றில் "உன்னுடைய எதிரிகளை நேசிக்கவும்,உன்னைச் சபிப்பவர்களை ஆசீர்வாதிக்கவும் உன்னை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யவும் ,இவர்கள் யாவருக்காகவும் பிராத்தனை செய்.",என்கிறார்.

புத்த பகவானும் மனிதன் தனது வறுமை,நோய்,அறியாமை,அகம்பாவம், முதுமை,இறப்பு,பற்றிய பயம்,துன்பம் ஆகியவற்றை நீக்குவதே யோகமாகும் என்கிறார்.
ஆசைகள் நீங்க புத்தர் கூறும் எட்டு வழிகள்,(அ)நல்வழி (ஆ)நற்செயல் (இ)நல்ல பேச்சு,(ஈ)நல்ல மனம் (உ)நல்ல வாழ்க்கை முறை (ஊ)நன்முயற்சி (எ)நல்ல எண்ணம்,(ஏ)நல்ல தியானம் (ஒ)அனைவரிடத்தும்  அன்பு (ஓ)ஆசைகளை துறத்தல் .

கீதையிலும் "அலையும் மனதை பயிற்சியாலும்,வைராக்கியதாலும் அடக்கலாம் ,எப்பொழுதும் மனிதன் தன மனதில் எழும் ஆசைகளை கட்டுப்படுத்தி திட புத்தியுடன்  இருப்பானானால் அவனே உண்மையில் மகிழ்ச்சயுடையவன்."எனப்படுகிறது. 

No comments:

Post a Comment